3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் ராஜ்நாத் சிங்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
இதுகுறித்து தேசிய கவுன்சில் உறுப்பினர் பாலாஜி சிவராஜ் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வரும் 28ம் தேதி சென்னை வருகிறார்.
பின்னர் 29ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வருவார். பின்னர் திருச்சியிலிருந்து பசும்பொன் செல்கிறார். அங்கு முத்துராமலிங்க தேவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
நீலகிரியில் இருந்த புறப்பட்டுள்ள தாமரை யாத்திரை குழு பசும்பொன் வருகிறது. பின்னர் அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இதையடுத்து 30ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications