ஆண்-பெண் திருமண வயதை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்

முன்னதாக இந்தத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது பேசிய பாமக உறுப்பினர் வேல்முருகன்,
பெண்ணுக்கு 18 வயதானால் அவர் பருவ வயதை எட்டியவராக (மேஜர்) கணக்கி்ல் கொள்ளலாம். ஆனால், ஒரு பெண் குழந்தை பெற 21 வயதை எட்டினால் தான் நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பெண்களின் நலனை கருத்தி்ல் கொண்டு திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும்.
அதே போல ஆண்களின் திருமண வயதை 21ல் இருந்து 25 ஆக உயர்த்த வேண்டும். ஒரு டாக்டரான அமைச்சர் பூங்கோதைக்கு இந்த விவரங்கள் மிக நன்றாகவே தெரியும். எனவே அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பூங்கோதை, உறுப்பினர் வேல்முருகன் சொல்வதை நான் முழுமையாக ஏற்கிறேன். இது தொடர்பாக கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். முதல்வருடன் ஆலோசித்துவிட்டு நிச்சயம் முடிவு எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் சத்துணவு மையங்களிலும், குழந்தைகள் மையங்களிலும் காலியாக உள்ள 10,327 பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும்.
குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை ஆய்வு செய்து தீர்வு காண மாவட்டந்தோறும் தனி அதிகாரியும் சென்னைக்கு 2 தனி அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்.
சத்துணவு மையங்களில் சரியான முறையில் பொருட்களை எடை போட்டு வழங்க ரூ.50 லட்சம் செலவில் மின்னணு தராசுகள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரவாணிகள் குறித்த கணக்கெடுப்பு விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பு ஏற்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications