திருமலையில் பக்தர்களிடம் கஞ்சா விற்றவர் கைது
திருமலை: திருப்பதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த நபரை கண்காணிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
திருமலை - திருப்பதியில் சிகரெட், மது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்றை யாரேனும் கள்ளத்தனமாக விற்கிறார்களா என்பதை கண்காணிக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ந்நிலையில் பக்தர்கள் தங்கும் விடுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த நபரை பார்த்த கண்காணிப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
அந்த நபரிடம் சோதனை நடத்தியபோது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவரது பெயர் ராமி ரெட்டி என்கிற யாதகிரி. இவர் திருமலையில் நீண்ட காலமாக கஞ்சா விற்று வருவதாக விசாரணையின்போது தெரிவித்தார்.
இதையடுத்து அவர் கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications