For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோயில் திருவிழாவில் மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

வருசநாடு: கோயில் திருவிழாவில் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்களை தாக்கிய 5 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருசநாடு அருகே உள்ள காமராஜபுரத்தில் பிரசித்திப் பெற்ற காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. காமராஜபுரம் மற்றும் முருக்கோடை கிராமத்தை சேர்ந்த 2 பிரிவினரிடையே முன் விரோதம் இருந்தது.

இந் நிலையில் திருவிழாவில் முருக்கோடையைச் சேர்ந்த சிலர் ஒட்டிய போஸ்டரில் சில தகாத வாசகங்களை இடம்பெற்றிருந்தன. இதை பார்த்த எதிர் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். போஸ்டரில் உள்ள தகாத வாசகங்களை உடனே நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் திருவிழாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது முறுக்கோடையைச் சேர்ந்த சிலர் மின்சாரத்தை துண்டித்தனர். தகவலறிந்த மின் வாரிய ஊழியர்கள் முருகன், ராஜா ஆகியோர் அதை சரி செய்ய சென்றனர். அவர்களை முருக்கோடை கிராமத்தை சேர்ந்த சிலர் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த ராஜா போலீசில் புகார் செய்தார். தகவலறிந்த டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது காமராஜபுரம் பொதுமக்கள் அவரை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்னைக்குரிய போஸ்டரில் உள்ள வாசகத்தை நீக்க டிஎஸ்பி உறுதிமொழி அளித்தை தொடர்ந்து பேராட்டம் கைவிடப்பட்டது.

மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக முறுக்கோடையைச் சேர்ந்த மனோகரன், குணசேகரன், வனராஜா உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X