வெடி மருந்து குடோனில் தீ- 3 பேர் படுகாயம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள வெடி மருந்து குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறி குடோன் உரிமையாளர், அவரது மனைவி, மகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள கஞ்சனூரை சேர்ந்தவர் முகமது யூனுஸ் (73). அரசு உரிமம் பெற்று கோவில் திருவிழாவுக்கு தேவையான வாண வெடிகளை தயாரித்து வழங்கி வந்தார். தனது வீட்டுக்கு அருகிலேயே வெடி மருந்து குடோன் வைத்துள்ளா.
முகமது யூனுசுடன் அவரது மனைவி அஜித்துன்னிசா (60), மகன் பாபு (33) ஆகியோரும் வாண வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை அந்த குடவுனில் தீ பிடித்தது. வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. தீ மளமளவென பரவி கட்டடம் எரிந்தது. முகமது யூனுஸ், அஜித்துன்னிசா, பாபு ஆகியோர் தீயில் சிக்கிக் கொண்டனர்.
அப்பகுதியினர் 3 பேரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்த அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் புதுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித்துன்னிசாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவலறிந்த தாசில்தார் கல்யாணம், துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications