For Daily Alerts
Just In
மதிமுக அங்கீகார வழக்கு - வைகோவுக்கு ஜெ. வாழ்த்து
சென்னை: மதிமுக அங்கீகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய வழக்கில் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தலைமை தேர்தல் ஆணையத்தில், உங்கள் தலைமையில் இயங்கும் மதிமுகதான் உண்மையான மதிமுக என்று நிரூபித்து வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
வேண்டுமென்றே பல கஷ்டங்களை கொடுத்தார்கள். அதை எல்லாம் முறியடித்து நீங்கள் வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
Comments
Story first published: Thursday, April 24, 2008, 10:20 [IST]