For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

+2 மார்க் ஷீட் திருத்தம்: மாணவருக்கு ஓராண்டு சிறை

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: பிளஸ் டூ மதிப்பெண் பட்டியலை திருத்தி மோசடியாக கல்லூரியில் சேர்ந்த வழக்கில் மாணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த வேதநாயகம் மகன் விக்டர் ஜெயராஜ். இவர் கடந்த 1997ம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்தார். பொதுத் தேர்வில் அவருக்கு 549 மார்க் கிடைத்தது.

வரலாறு பாடத்தில் 28 மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் விக்டர் ஜெயராஜ் தனது சான்றிதழில் வரலாறு பாடத்தில் எடுத்த மதிப்பெண் 28ஐ 175 ஆகவும், மொத்த மதிப்பெண் 549ஐ 696 ஆகவும் திருத்தி பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் 1998-99ம் கல்வியாண்டில் பி.ஏ சேர்ந்தார்.

சில காலம் கழித்து சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகம் விக்டர் ஜெயராஜின் மதிப்பெண் சான்றிதழை சென்னை அரசு தேர்வு துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பியது. அதில் அவரது மதிப்பெண் பட்டியல் திருத்தப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கல்லூரியின் தேர்வு இயக்குநர் நெல்லை மாநகர குற்றப்பிரிவு விக்டர் ஜெயராஜ் மீது புகார் செய்தார். போலீசார் அவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நெல்லை குற்றவியல் முதலாவது கோர்ட்டில் நடந்தது. வழக்கை மாஜிஸ்திரேட் ஜெசிந்தா மார்டின் விசாரித்து விக்டர் ஜெயராஜுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து விக்டர் ஜெயராஜ் சிறையிலடைக்கப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X