கொழும்பு-பஸ்சில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: கொழும்பில் பஸ்சில் குண்டு வெடித்து 24 பேர் பலியாயினர்.
கொழும்புவின் தென் பகுதியில் உள்ளது பிலியந்தாலா. நேற்று மாலை இப் பகுதியில் பஸ்சில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதில் 24 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை ராணுவத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த 22ம் தேதி இரவு யாழ்பாணத்தில் ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் இருதரப்பிலும் அதிகமானோர் பலியாயினர். இதனால் இருதரப்புக்கும் இடையிலான மோதல் மேலும் வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications