சென்னை-பட்டப்பகலில் அடகு வியாபாரி அடித்து கொலை
சென்னை: குரோம்பேட்டை அருகே இன்று காலையில் அடகு வியாபாரி ஹாக்கி மட்டையால் அடித்து கொடூரமாக கொல்லப்பட்டார்.
சென்னை குரோம்பேட்டை நேருநகர் நியூகாலனியில் நகை மற்றும் அடகுக்கடை நடத்திவந்தவர் மோதிலால் ஜெயின்(52). வழக்கம்போல் இன்று காலை 9 மணியளவில் கடையை திறந்து வைத்திருந்தார் ஜெயின். சற்றுநேரத்தில் அவரது கடையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.
அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கடைக்குள் சென்று பார்த்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் மோதிலால் ஜெயின் இறந்து கிடந்தார்.
தலையில் ஹாக்கி மட்டையைக் கொண்டு கடுமையால் தாக்கப்பட்டதால் அவர் இறந்ததாகத் தெரிகிறது. அவரைத் தாக்கியவர்கள் தப்பிவி்ட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மோப்பநாய் புருமனாவை வரவழைத்தனர். அந்த நாய் சிறிது தூரம் சென்றுவிட்டு நின்றது.
அடகுக்கடையில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.6000 ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் குரோம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications