விஜய் மட்டுமே பிராண்ட் அம்பாசடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு!
சென்னை சூப்பர் கிங்ஸ் பிராண்ட் அம்பாசடராக விஜய் மற்றும் நயனதாரா நியமிக்கப்பட்டனர். கடந்த 23ம் தேதி நடந்த முதல் போட்டியில் விஜய் மட்டுமே ஸ்டேடியத்துக்கு வந்தார். நயனதாரா வரவில்லை. இதையடுத்து தூதர் பதவியில் இருந்து நயனதாரா அதிரடியாக நீக்கப்பட்டார்.
அவருக்கு கொடுக்கப்பட்ட ரூ.40 லட்சம் முன்பணத்தையும் திருப்பித் தரும்படி நிர்வாக தரப்பில் நோட்டீஸ் விடப்பட்டது. மேலும் நயனதாராவுக்குப் பதில் த்ரிஷா நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த நயனதாரா, தனக்கு எதிராக சதி நடப்பதாக கொந்தளித்தார்.
இந்த நிலையில் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்த திரிஷா, பிராண்ட் அம்பாடசர் ஆக விரும்பவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் சூப்பர் கிங்ஸ் மீடியா இயக்குனர் பாபா கூறுகையில், அணியின் தூதுவராக விஜய் மட்டும் இருப்பார். நயன்தாராவுக்கு மீண்டும் வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக யாரையும் நியமிப்பதாகவும் இல்லை என்று கூறினார்.