காங்கிரஸ் அலுவலகத்தில் பேச்சாளர் திடீர் தற்கொலை
பழநி: பழநி காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில பேச்சாளர் சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் தற்கொலை கொண்டார்.
திண்டுக்கல்மாவட்டம், பழநி தாலுக்கா அ. கலையம்புத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் காங்கிரஸ் கட்சியில் மாநில பேச்சாளராக உல்ளார். திருமணமாகாதவர். இதனால் கடந்த பல வருடங்களாக பழநி ஆர்எப் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தங்கி இருந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். மீண்டும் நேற்று பழநி காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அலுவலகத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்ி அடைந்தனர். பழநி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
போஸ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.