2 அண்ணா பல்கலை மாணவிகள் வாந்தி-மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதியில் பாயாசம் சாப்பிட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் 2 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கு விடுதியில் பாயாசம் வழங்கப்பட்டது. பாயாசம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் என்ஜினீயரிங் 2ம் ஆண்டு படிக்கும் செளந்தர்யா, காமாட்சி ஆகிய 2 இரு மாணவிகளுக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர் மாணவிகள் விடுதியில் விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications