ஆந்திரா அணை கட்டுவதை தடுப்போம்-துரைமுருகன்
சென்னைL: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தமிழகம் தடுக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையி்ல்,
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டப் போவதாக மீண்டும் செய்தி வெளியாகியுள்ளது. இதைத் தடுக்க அரசு என்ன முயற்சி எடுத்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்,
இந்த பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகளுடன் நமது அதிகாரிகளும், அந்த மாநில அதிகாரிகளும், பேச்சு நடத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் அணை கட்ட வேண்டும் என்றால் அதற்கான காரணங்களை நமக்கு அவர்கள் தெரிவிக்க வேண்டும். அணை கட்டினால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை நாம் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
உச்சநீதி மன்றத்தின் ஆலோசனையையும் மீறி அவர்கள் அணை கட்ட முயன்றால் அரசு எந்த நிலையிலும் அதை சந்தித்து தடுக்கும் என்றார்.