கந்து வட்டி கொடுமை-தம்பதி, 2 மகள்கள் தற்கொலை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மார்த்தாண்டம் அருகில் உள்ள தொலையா வட்டத்தை சேர்ந்தவர் சிறுமேனி. இவரது மனைவி பேபி சரோஜா. இவரது மகள்கள் உஷா, ஜஸ்டின் நிசா, ஐஸ்டின் ஐசா, மகன் அனில் விஜின்.
மகள்களின் திருமணத்திற்காக சிறுமேனி மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். இதனால் அசல் தொகையை விட வட்டி தொகை அதிகமானது. இதனால் அவர் அசலையும், வட்டியையும் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
கடன் கொடுத்த கந்து வட்டிக் கும்பல் உடனே பணம் கேட்டு நெருக்குதல் கொடுத்தனர்.
இந் நிலையில் அந்த கந்து வட்டி கும்பல் சிறுமேனியின் மகள்களிடம் தவறாக நடக்க முயன்றுள்ளது. (பணத்தை வசூலிக்க கந்து வட்டிக் கும்பல்கள் கையாளும் 'டெக்னிக்குகளில்' இது தான் மிகக் கொடுமையானது)
இதனால் மனமுடைந்த சிறுமேனி தனது மனைவி, மகள் ஜஸ்டின் நிசா, ஜஸ்டின் ஐசா ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குழித்துறை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கந்து வட்டி, மீட்டர் வட்டி கும்பல்கள் கரூர், மதுரை, தேனி, ஈரோடு, நாகர்கோவில் மாவட்டங்களில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications