For Quick Alerts
For Daily Alerts
Just In
பெண் சிசு கொலையில் மதுரைக்கு 2 வது இடம்
மதுரை: எய்ட்ஸ் மற்றும் பெண் சிசு கொலையில் மதுரை இரண்டாவது இடத்தில் உள்ளது.
மதுரையில் மத்திய கள விளம்பரத்துறை, ஏ.ஆர்.டி. தொண்டு நிறுவனம் சார்பில் உலக சுகாதார விழா நடந்தது.
தவறான உணவு பழக்கவழக்கங்களால் ஏற்படும் பாதிப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு குறித்து மத்திய கள விளம்பரத்துறை உதவி அலுவலர் வேல்முருகன் பேசினார்.
பின்னர் பேசிய மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஜெயலட்சுமி,
எயிட்ஸ் பாதிப்பிலும், பெண் சிசு கொலையிலும் மதுரை இரண்டாவது இடத்தில் உள்ளது. இது வேதனை தரக்கூடியது. எதிர்காலத்தில் இந்த சமூகத்தை பாதிக்கும் செயல்கள் குறைய வேண்டும்.
பெண் சிசு கொலை குற்றம் குறைய விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அதிகமாக நிதி ஒதுக்குகிறது என்றார்.
Comments
Story first published: Thursday, May 1, 2008, 14:11 [IST]