வீரப்பன் சமாதியில் வெண்கல சிலை-முத்துலட்சுமி திட்டம்

வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது உடல் மேட்டூர் அணை அருகே மூலக்காடு வனப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் வீரப்பனுக்கு நினைவு மண்டபம் கட்ட அவனது மனைவி முத்து லட்சுமி திட்டமிட்டுள்ளார். அவர் கூறுகையில்,
எனது கணவர் ஏழை-எளியவர்களிடம் பரிவுடன் பழகி வந்தார். நயவஞ்சக செயல் மூலம் அவரை கொன்று விட்டனர்.
மூலக்காட்டில் அவர் சமாதி உள்ள இடத்தில் நான் நினைவகம் கட்ட உள்ளேன். இதற்கான பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும். அந்த இடத்தில் எனது கணவரின் முழு உருவ வெண்கல சிலை ஒன்றையும் நிறுவப் போகிறேன்.
எனது கணவர் தமிழக எல்லையை காக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இதை இப்போது தான் எல்லைப் பகுதி மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். தினம், தினம் என் கணவர் சமாதிக்கு வந்து மண் எடுத்துச் செல்கிறார்கள்.
என் கணவர் ஆத்மாவை அவர்கள் 'எல்லைச்சாமி'யாக பார்க்கிறார்கள் என்றார்.
தர்மபுரியிலும் சிலை:
இதற்கிடையே தர்மபுரியிலும் வீரப்பனுக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் தொடரை இயக்கி வரும் டைரக்டர் கவுதமனின் யோசனையின் பேரில் பா.ம.கவைச் சேர்ந்த சிவகுமார் இந்த சிலையை உருவாக்கி வருகிறார்.
சிவகுமார் கூறுகையில், ரூ. 2 லட்சம் செலவில் வீரப்பனுக்கு சிலை செய்து வருகிறேன். தர்மபுரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தாத்தநாயக்கன் பட்டியில் என் சொந்த நிலத்தில் இந்த சிலை நிறுவப்படும் என்றார்.
வரும் ஜூன் மாதம் இந்த சிலையை திறக்கவுள்ளாராம் சிவக்குமார்.












Click it and Unblock the Notifications