ஈரோடு-சூறைக் காற்றில் 40,000 வாழை மரங்கள் நாசம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: சென்னிமலை அருகே சூறைக் காற்றால் 40,000 வாழைகள் நாசமடைந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் நர்கீஸ் புயல் உருவானது. இதில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. புயல் மியான்மரை நோக்கி நகர்ந்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சென்னிலையை அருகே உள்ள பகுதிகளில் நேற்று பயங்கர சூறைக் காற்று வீசியது. இதில் மல்லம்பாளையம், ஈங்கூர், சரவம்பதி பகுதிகளில் பயிரிப்பட்டிருந்த 40,000 வாழைகள் அடியோடு சாய்ந்தன.
ஏற்கனவே பெய்த மழையால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர். இந்நிலையில் சூறைக்காற்றில் வாழைகள் நாசமானது விவசாயிகளை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications