For Daily Alerts
Just In
ஹெராயின் கடத்தல்-இலங்கை ஆசாமி கைது
சிவகங்கை: ஹெராயின் கடத்தில் ஈடுபட்ட வந்த இலங்கையைச் சேர்ந்த நபர் சிவகங்கையில் பிடிபட்டார்.
இலங்கையை சேர்ந்த குணா என்பவர் தமிழகத்தில் ஊடுருவி ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டதையடுதது அவர் மீது சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அவரை கைது செய்ய முயன்றபோது தலைமறைவாகிவிட்டார்.
கடந்த ஆறு மாதமாக போலீசார் குணாவை தேடி வந்தனர். இந் நிலையில் சிவகங்கை சி.பி காலனியில் குணா வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து.
இதையடுத்து போலீஸ் படை சிவகங்கை விரைந்து. அங்கு அப் பகுதி சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த குணாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Comments
Story first published: Monday, May 5, 2008, 15:29 [IST]