திதி கொடுக்க வந்தவர் சுருளி அருவியில் விழுந்து பலி

Subscribe to Oneindia Tamil

தேனி: சுருளி அருவியில் திதி கொடுக்க வந்த வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான சுருளி அருவி உள்ளது. இந்த அருவியின் இயற்கை காட்சிகளை ரசிக்கவும், குளித்து மகிழவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்டம் அலைமோதுகின்றது. சுருளி அருவியின் மேலே செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி அருகே வாழவைத்துப்பட்டியைச் சேர்ந்த ஆண்டிமூப்பன் என்பரின் மகன் ரமேஷ் (20) தனது பாட்டிக்கு திதி கொடுக்க உறவினர்களுடன் சுருளி அருவிக்கு வந்தார்.

அருவியில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளிப்பதற்காக ரமேஷ் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயமாடைந்த அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+