தூத்துக்குடியில் ஜார்ஜ் புஷ் கொடும்பாவி எரிப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: இந்தியர்கள் நல்ல உணவு சாப்பிட ஆரம்பித்துள்ளதால்தான் உணவுப் பற்றாக்குறையும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டிருப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது.

உலக அளவில் விலைவாசி உயர்வுக்கும், உணவுப் பற்றாக்குறைக்கும் காரணம் இந்தியர்கள் தரமான உணவை அதிகமாக விரும்பி சாப்பிடுவதுதான் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிபர் புஷ் பேசியிருந்தார். இந்தியாவில் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் புஷ்சை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது புஷ்சின் உருவ பொம்மையை எரித்தனர். மாவட்ட செயலாளர் புலிராஜ், நகர தலைவர் சங்கரன், மாவட்டத்

தலைவர் முத்து காந்தாரி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+