எரிந்த விடைத்தாள்கள் சென்னைக்கு மாற்றம்
வேலூர்: வேலூர் பள்ளியில் தீவிபத்தில் சேதமடைந்த பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள், சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சென்னையில் இந்த விடைத்தாள்கள் திருத்தப்படவுள்ளன.
வேலூர் ஊரீஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 24-ந் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த, விழுப்புரம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 12,888 ஆங்கிலம் இரண்டாம் விடைத்தாள்கள் சேதமடைந்தன.
பெருமளவிலான விடைத்தாள்கள் சேமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பின. இந்த நிலையில், சென்னையில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, எரிந்த விடைத்தாள்களின் சாம்பல் துகள்களை ஆய்விற்காக சென்னைக்கு எடுத்துச் சென்றனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த 1-ந் தேதி அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம், வேலூர் முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பிச்சை ஆகியோர் தீ விபத்து நடந்த அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தீப்பிடித்து எரிந்த விடைத்தாள்களை பார்வையிட்டனர். அப்போது பெரும்பாலான விடைத்தாள்கள் லேசான சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அதிக அளவில் சேதம் அடையாத விடைத்தாள்களை சென்னைக்குக் கொண்டு சென்று திருத்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்தெடுத்த அதிகாரிகள் அவற்றை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications