கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு நேரு பெயர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, கிண்டி, கத்திப்பாரா சந்திப்பில் கட்டப்பட்டு வரும் பல அடுக்கு மேம்பாலத்திற்கு ஜவஹர்லால் நேரு பெயர் சூட்டுவது தொடர்பாக மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று சட்டசபையில் இன்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது, இதுதொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் ஈ.எஸ்.எஸ்.ராமன் கத்திப்பாரா பாலத்திற்கு இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேருவின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், இந்தத் திட்டத்தை மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறைதான் நிறைவேற்றி வருகிறது. எனவே பாலத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி, மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+