For Daily Alerts
Just In
பெயிலானவர்களுக்காக ஜூன் 23 முதல் பிளஸ்டூ மறுதேர்வு
சென்னை: பிளஸ்டூ தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு வரும் ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில்,
பிளஸ்டூ தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு வரும் ஜூன் 23ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதிவரை மறு தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை அவரவர் பள்ளியிலேயே வாங்கிக் கொள்ளலாம். தனித் தேர்வு எழுதியவர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
Comments
Story first published: Friday, May 9, 2008, 18:53 [IST]