சாப்ட்வேர் பயிற்சியுடன் வேலை-1,500 பேரிடம் ரூ.50 கோடி மோசடி
சென்னை: சென்னையில் சாப்ட்வேர் பயிற்சியும் வேலையும் அளிப்பதாகக் கூறி சுமார் 1,500 பேரிடம் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துவிட்டு ஏமாற்றியுள்ளது ஒரு நிறுவனம்.
சென்னை அண்ணாநகர் மேற்கு, 18வது மெயின் ரோட்டில் விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இதில் வேலைக்குச் சேர ரூ.50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயிற்சி அளிப்பதற்காக என்று சொல்லி இந்தப் பணத்தை வசூலித்துள்ளனர்.
முதலில் 6 மாத பயிற்சி, பின்னர் வேலை என்று உறுதியளிக்கப்பட்டது. பயிற்சி காலத்தில் ரூ.11,000 வரை உதவித் தொகை தரப்படும் என்றும் கூறப்பட்டது.
பிஇ, எம்.சி.ஏ. உள்ளிட்ட பொறியியல் படிப்பு முடித்த ஏராளமானோர் பணம் கட்டினர். சுமார் 1,500 பேர் வரை இவ்வாறு பணத்தைக் கட்டியதாகத் தெரிகிறது.
இதில் சிலரை மட்டும் பயிற்சிக்காக சேர்த்துக் கொண்டு பிறரை பின்னர் வருமாறு கூறியுள்ளனர். ஆனால், பயிற்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுதியளித்தபடி உதவித் தொகையும் தரப்படவில்லை.
பணம் கட்டியவர்கள் தங்களையும் பயிற்சியில் சேர்க்கக் கோரியும் வேலை தரக் கோரியும் தினமும் வந்து சென்றுள்ளனர். அவர்களை பின்னர் அழைப்பதாகச் சொல்லி இந்த நிறுவனம் காலம் கடத்தி வந்தது.
இதில் பணம் கட்டியவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் மோதலும் நடந்து வந்தது.
இந் நிலையில் அண்ணா நகரில் இயங்கி வந்த இந்த நிறுவனம் நேற்று திடீரென மூடப்பட்டது. திருமங்கலத்தில் உள்ள அதன் கிளையும் மூடப்பட்டது.
பணம் கட்டி ஏமாற்றமடைந்தவர்கள் இதையறிந்து நேற்று மாலை திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தங்களை ஏமாற்றிய நிறுவன நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், பணத்தை திரும்பப் பெற உதவ வேண்டும் என கோரினர்.
இது குறித்து விசாரிக்குமாறு போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். இதையடுத்து இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், துணை கமிஷனர் ஜெய கெளரி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நிறுவனம் ரூ. 50 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்: பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
கிண்டி மேம்பாலத்தில் கைமாறிய 1.5 கிலோ தங்கம்.. சென்னை ஜிஎஸ்டி ஆபீசர் யாருனு பார்த்தால்? செம ட்விஸ்ட் -
LPG Gas Cylinder Shortage LIVE: பிரதமர் மோடி அவசர ஆலோசனை -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில்












Click it and Unblock the Notifications