வழக்குகளில் தோற்றால் அரசு வக்கீல் டிஸ்மிஸ்- அமைச்சர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கோவை: வழக்குகளில் வெற்றி பெறாத அரசு வழக்கறிஞர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சட்டம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

அனைத்து மாவட்ட சிவில் மற்றும் குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள அரசு வழக்கறிஞர்கள் எவ்வளவு வழக்குகள் நடத்துகிறார்கள், அதில் அரசுக்கு சாதகமாக எத்தனை வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை அவர்கள் அரசுக்கு தெரியப்படுத்துவதில்லை.

இனி இதற்காக சட்டத்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்படும. இந்த பிரிவுக்கு அனைத்து அரசு வழக்கறிஞர்களும் மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். அந்தந்த மாதங்களில் நடத்திய வழக்குகள், அவற்றில் சாதகம் மற்றும் பாதகமாக அமைந்த வழக்கு விவரங்களை அந்த அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

வழக்கின் வெற்றிக்கு தகுந்தாற்போல ஊக்கம் அளிக்கப்படும். அதே சமயம் வழக்குகளில் வெற்றி பெற முடியாத தகுதி இல்லாத வழக்கறிஞர்கள் தயவு தாட்சண்யமின்றி பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சொந்தமாக கட்டடம் கட்டித் தரப்படும். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+