இந்தியாவில் 20% போலி மருந்து: அதிர்ச்சி ரிபோர்ட்

தலைவலி, ஜூரம் என்றால் டாக்டரை பார்ப்பதை தவிர்த்து மெடிக்கல் ஷாப்பில் பாரசிட்டமல் போன்ற மருந்துகளை வாங்கி சாப்பிடும் 'கலாசாரம்' நம்மில் பலருக்கு உண்டு. அப்படி சாப்பிடுபவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சி தரும்.
இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளில் 20 சதவீதம் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் நோயை எதிர்த்து செயல்படவில்லை என்றால் போய் தொலைகிறது என்று விட்டுவிடலாம். ஆனால் உடலுக்கு கேடுவிளைவிப்பவை என்று தெரியும் போது அதிர்ச்சி ஏற்படுகிறதல்லவா?
மரணத்துக்கு வழிகோலும் இந்த போலி மருந்து விற்பனை ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்ந்து வருகிறது. உலக அளவில் விற்பனையாகும் போலி மருந்துகளில் 75 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்று பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றொரு அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.
இந்த தகவல்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையை உசுப்பேற்றியுள்ளது. உயிர்குடிக்கும் போலி மருந்து மார்கெட் குறித்த கண்காணிப்பில் அதிகாரிகள் அதிரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி சுரேந்தர் சிங் தலைமையில் போலி மருந்து மார்க்கெட் வேட்டை மேற்கொள்ளப்படுகிறது. 6 மாத கால அவகாசத்தில் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும். மருந்து ஆய்வாளர்களே நோயாளிகளாக சென்று 31,000 மருந்துகளை சாம்பிள்களாக பெற்று பரிசோதனைக்கூடங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
61 முன்னணி மருந்து கம்பெனிகளின் மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. காசநோய், அலர்ஜி, சர்க்கரை நோய், இருதய நோய், ஸ்டிராய்டு, NSAID ரக வலி நிவாரணிகள் மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளை சோதித்து அறிய உள்ளனர்.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications