திருமணத்துக்கு காதலன் மறுப்பு- காதலி தற்கொலை
பாவூர்சத்திரம்: திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் மனமுடைந்த காதலி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள மலையராமபுரத்தைச் சேர்ந்தவர் ராஜன், மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மகள் மகேஸ்வரி. பீடி சுற்றும் தொழிலாளி. அதேப் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ், லாரி கிளினராக உள்ளார். இவர்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் மகேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லிங்கராஜிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.
இதனால் விரக்தியடைந்த மகேஸ்வரி கடந்த மாதம் 25ம் தேதி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான லிங்கராஜை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications