தமுமுகவுக்கு தடைவிதிக்க அரசுக்கு விஎச்வி கோரிக்கை
ஊட்டி: தமுமுக அமைப்புக்கு தமிழக அரசு தடைவிதிக்கவேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) வலியுறுத்தியுள்ளது.
ஊட்டியில் நடந்த விஎச்பி மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக இந்த கூட்டம் நடைபெற்று வந்தது.இதில், தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டு விடும் தமுமுகவை தடை செய்ய வேண்டும்.
இந்து கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் நிலுவையில் உள்ள குத்தகை, வாடகை பணத்தை உடனடியாக வசூலிக்க நடவடிககை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை பாதுகாக்க வேண்டும். கோவில் நிலங்களை மாற்று மதத்தினர்க்கு வழங்கக் கூடாது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். தமிழக மக்களின் வாழ்கை தரம் உயர்த்துவதற்கு மாநில அரசு உறுதி அளிக்க வேண்டும்.என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் விஎச்பி மாநில செயல் தலைவர் ஆளவந்தான், இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கோபால்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications