போலீஸ் லாக்கப்பில் கைதி தற்கொலை முயற்சி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சைக்கிள் திருட்டு வழக்கில் விசாரணைக்காக பிடித்து வரப்பட்டவர் காவல் நிலையத்தில் உடலில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அடிக்கடி சைக்கிள்கள் திருடு போயின. இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த தாசன் மகன் ஜோராம் என்பவரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருடு போன சைக்கிள் குறித்து அவரிடம் விசாரணை செய்துவிட்டு மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் கிளம்பினர்.

அப்போது அவசரமாக பாத்ரூம் செல்ல வேண்டும் என ஜோராம் கூறியதால் அவரது கைவிலங்கை போலீசார் கழற்றிவிட்டனர். கழிவறைக்கு சென்ற ஜோராம் அங்கு வைத்து சவரம் செய்யும் பிளேடால் தனது கை, கால் மற்றும் உடலில் பல இடங்களில் கிறினார்.

இதையடுத்து வலியால் அலறி துடித்த ஜோராமை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று போலீசார் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தியபோது ஜோராம் உடலில் காயங்கள் இருந்ததால் அவரை காவலில் வைக்க மறுத்து விட்ட மாஜிஸ்திரேட், சிகிச்சைக்காக ஜோராமை அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் போலீசார் கொண்டு சேர்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+