கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சாலையோர மரத்தில் கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.
கடலூர், சிதம்பரம் இடையே உள்ள புதுச்சத்திரம் என்ற இடத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது.
காரில் இருந்தவர்கள் புதுச்சேரியிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி போய்க் கொண்டிருந்தனர். அதிகாலையில் புதுச்சத்திரம் பகுதியில் கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சரோஜா (50), மேரி (75), பன்னீர் செல்வம் (50) ஆகியோர் உயிரிழந்தனர்.
மாலினி (40), நளினி (22) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications