போன் ஒட்டுக்கேட்பு: நீதிபதி சண்முகம் கமிஷன் இடைக்கால அறிக்கை
சென்னை: போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி சண்முகம் தலைமையிலான கமிஷன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
தமிழக தலைமைச்செயலாளர் திரிபாதி, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயா தொலைபேசி உரையாடல் ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த உரையாடல் விவரங்கள் பத்திரிகையில் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து 3 மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார்.
கடந்த வாரம் தனது விசாரணையை கமிஷன் தொடங்கியது. திரிபாதி, உபாத்யாயா ஆகியோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
அப்போது அதிகாரிகளுடன் பேசுவதை டேப் செய்வதை பழக்கமாக வைத்திருந்ததையும், அதில் ஒரு டேப் காணாமல் போனதாகவும் விசாரணையில் உபாத்யாயா குறிப்பி்ட்டிருந்தார்.
இந்நிலையில் சண்முகம் கமிஷன் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் நேற்று தாக்கல் செய்தது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கையை நீதிபதி சண்முகம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications