பெங்களூர் தமிழ் பெண் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி
பெங்களூர்: ஐஏஎஸ் தேர்வில் பெங்களூரை சேர்ந்த தமிழ் பெண் தீபா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த ஏ.எஸ்.மூர்த்தியின் மகள் தீபா(26). சேஷாத்திரிபுரம் பி.யூ. கல்லூரியில் பொருளாதாரத்துறை பேராசிரியையாக பணியாற்றுகிறார்.
சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவில் ஐஏஎஸ் அந்தஸ்துக்கு அகில இந்திய அளவில் 149வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
தீபாவின் பெற்றோர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை பூர்வீகமாக கொண்டவர்கள். தாயார் ராணி. சகோதரிகள் நந்தினிபிரியா, பாக்லெட்சுமி. இவர்களில் பாக்யலெட்சுமி டாக்டராக இருக்கிறார். நந்தினிபிரியா கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
ஐஏஎஸ் வெற்றி குறித்து தீபா கூறுகையில், பள்ளி, கல்லூரிகளில் படித்தபோதும் அதன்பிறகு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியபோதும் எந்த வித வேறுபாடும் காட்டாமல் அனைத்து ஆசிரியர்களும், பேராசிரியர்களும் எனக்கு அளித்த ஆதரவினால்தான் இந்த வெற்றியை பெற முடிந்தது. ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும், பெண்கள் முன்னேற்றமும்தான் எனது குறிக்கோள் என்றார் தீபா.












Click it and Unblock the Notifications