ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி: டென்டர் வழங்க அரசுக்கு இடைக்காலத் தடை

Subscribe to Oneindia Tamil

Trainers of Air crew
சென்னை: சென்னையில் உள்ள ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி அகாடமிக்கு, பயிற்சி அளிப்பதற்கான டென்டரை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை தி.நகரைச் சேர்ந்த நியூ டெக் இன்டர்நேஷனல் அகாடமி என்ற நிறுவனம் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

அதில், தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியருக்கு விமான பணிப் பெண் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை எங்களது அகாடமிதான் ஏற்று பயிற்சி அளித்து வருகிறது.

எங்களது பயிற்சி முகாமை இந்திய ஏர்ஹோஸ்டஸ் பயிற்சி சங்கமும் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், எங்களது நிறுவனத்தை விட்டு அங்கீகாரமே இல்லாத, ஏர் ஹோஸ்டஸ் அகாடமிக்கு டென்டர் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அனைத்து நடைமுறைகளும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செய்யப்பட்டுள்ளது.

டென்டர் வழங்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன் தமிழக அரசு ஏர் ஹோஸ்டஸ் அகாடமிக்கு டென்டர் வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+