இடி தாக்கி திருவண்ணாமலை கோவில் கோபுர சிலை உடைந்தது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கோபுரத்தை இடி தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த சிங்கமுக சிலை உடைந்து விழுந்தது.
அக்னி ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில். இந்தக் கோவிலில் மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன. இதில் மிகவும் உயரமானது ராஜகோபுரம். 217 அடி உயரம் கொண்ட இக்கோபுரம், தென்னிந்தியாவிலேயே மிகப் பெரியதாகும்.
ராஜகோபுரத்திற்கு அடுத்துள்ள கோபுரத்திற்கு வள்ளால மகாராஜ கோபுரம் என்று பெயர். 1340ம் ஆண்டு வள்ளால மகாராஜா இந்தக் கோபுரத்தைக் கட்டியதால் அவருடைய பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலும் இருந்தது. அப்போது வள்ளால மகாராஜா கோபுரத்தின் மீது இடி விழுந்தது. இதில் கோபுரத்தில் இருந்த சிங்கமுக சிலை உடைந்து கீழே விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேதமடைந்த சிலையை சரி செய்யும் பணியை கோவில் நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications