ரயில்வே கிராசிங்கில் பஸ் மீது ரயில் மோதல்!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ஆள் இல்லா ரயில்வே கிராசிங்கில் பஸ் மீது ரயில் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
அக்காள் மடம் என்ற இடத்தில் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த இடத்தில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி பாசஞ்சர் ரயில் சென்றது.
அப்போது பாம்பனில் இருந்து குந்துகால் என்ற இடத்திற்கு அரசு டவுன் பஸ் சென்றது. பஸ் டிரைவர் ரயில் வருவதை, கவனிக்காமல் பஸ்சை இயக்கியபோது பஸ் மீது ரயில் பங்கரமாக மோதியது.
இதில் பஸ் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் பலியாகவில்லை. ஆனால் பஸ் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் பயணிகள் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications