இலங்கை திரும்ப கருணா விருப்பம்-பிரிட்டன் பரிசீலனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பகுதியின் தளபதியாக இருந்தவர் கர்ணா. ஆனால் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து 2004ம் ஆண்டு புதிய பிரிவை உருவாக்கினார். அவரது பிரிவுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று பெயரிடப்பட்டது.
புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து புதுப் பிரிவை உருவாக்கிய கருணா, அரசுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார். அரசுப் படையினருடன் இணைந்து கொண்டு கருணா குழுவினர் செயல்பட்டதால் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி திடீரென லண்டனில் கைது செய்யப்பட்டார் கருணா. போலி பாஸ்போர்ட் மூலம் அவர் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு கடந்த ஜனவரி மாதம் 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் மே 9ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது குடியேற்றப் பிரிவு முகாமில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்த காலத்தில் கருணா, இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, இலங்கைக்கே தன்னைத் திருப்பி அனுப்புமாறு விண்ணப்பித்துள்ளாராம் கருணா.
ஆனால் முன்பு இருந்ததைப் போல தற்போது கருணாவுக்கு சாதகமான நிலை இலங்கையில் இல்லை என்று கூறப்படுகிறது. அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு முழுக்க முழுக்க பிள்ளையான் வசம் போய் விட்டது. அவர் தற்போது கிழக்கு மாகாண முதல்ராகவும் ஆகி விட்டார்.
பிள்ளையான் குழுவினர், முற்றிலும் கருணாவுக்கு எதிராக உள்ளனர். அரசும், பிள்ளையான் குழுவுக்கு ஆதரவாக உள்ளது. எனவே முன்பு போல கருணாவால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கருணாவின் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications