For Quick Alerts
For Daily Alerts
Just In
கருணாநிதி- ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு
சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதியை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
கோபாலபுரத்தி்ல் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலையில் வந்தார். அங்கு கருணாநிதியை சந்தித்து அரைமணி நேரம் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சிதம்பரம் இது பற்றி கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தில் வெள்ளச் சேத நிவாரண பணிகள், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் குறித்து முதல்வருடன் பேசினேன்.
வெள்ளச் சேத நிவாரணத்துக்கு மத்திய அரசின் நிதியுதவியை விரைவில் வழங்குவதாக முதல்வரிடம் உறுதியளித்துள்ளேன் என்றார்.
Comments
Story first published: Monday, May 26, 2008, 15:19 [IST]