பார்ட்டியில் பெண்ணை கடத்திய யுஎஸ் என்ஜீனியர்!
சென்னை: ஆசிரியையை கடத்திச் சென்றதாக அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் சாப்ட்வேர் என்ஜீீனியரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஆண்ட்ரூ பேக்கர் (30). இவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மனைவி ஆசிரியை கெல்லி லெபர்-ஐ (28), அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் சாப்ட்வேர் என்ஜீனியரான ஜோன்ஸ் மாத்யூ என்பவர் கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தார்.
மேலும், மாத்யூ தனது மனைவியை 2 நாட்கள் தனது பொறுப்பில் வைத்திருந்ததாகவும், பின்னர் அவரை விட்டு விட்டு மனைவியின் கைப்பை மற்றும் செல்போனுடன் தப்பி விட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆண்ட்ரூவும், கெல்லி லெபரின் குடும்ப நண்பர்தான் ஜோன்ஸ் மாத்யூ. 2 நாட்களுக்கு முன்பு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு பார்ட்டியில் கலந்து கொள்ள 3 பேரும் சென்றிருந்தனர்.
பார்ட்டியின்போது ஆண்ட்ரூ பேக்கர் முன்கூட்டியே அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் பார்ட்டி முடிந்ததும் கெல்லி லெபர் கால் டாக்சியில் தனது வீட்டுக்குக் கிளம்பினார். அவருடன் ஜோன்ஸ் மாத்யூவும் உடன் பயணித்துள்ளார். அந்த சமயத்தில்தான் கெல்லியை, ஜோன்ஸ் கடத்தியதாக பேக்கர் கூறுகிறார்.
இன்று காலைதான் கெல்லி தனது வீட்டுக்குத் திரும்பினார். தனது கணவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து பேக்கர் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், ஜோன்ஸை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications