ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
விசாகபட்டிணம்: ஆந்திராவில் நேற்று மாலை 4.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
விசாகபட்டிணம் மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 புள்ளிகளாகப் பதிவானது.
நர்சிபட்டிணத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. 3 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தையடுத்து மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு ஓடினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சில குழந்தைகள் காயமடைந்தனர். வீடுகளில் பொருட்கள் உருண்டு விழுந்தன.
மேலும் இந்த மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆனால், சேதம் ஏதும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications