மன்னார் சண்டையில் 25 ராணுவ வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இன்று மன்னார் மேற்குப் பகுதியில் உள்ள மாளிகைத் திடல் என்ற இடத்தில் கடும் சண்டை நடந்தது.
ராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ராணுவத்தினர் 25 பேர் கொல்லப்பட்டனர். 45 பேர் படுகாயமடைந்தனர்.
புலிகளின் ஆவேசத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்தினர் ஆயுதங்கள், துப்பாக்கிகளைப் போட்டு விட்டு தப்பி ஓடினர். ராணுவத்தினர் போட்டு விட்டுச் சென்ற ஆயுதங்களை விடுதலைப் புலிகள் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications