பிஇ படிப்பில் சேர 1.25 லட்சம் பேர் விண்ணப்பம்-25ம் தேதி ரேங்க் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பிஇ, பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 1.25 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது ரேங்க் பட்டியல் வரும் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் மே மாதம் 10ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாளான நேற்று (மே 31) வரை மொத்தம் 1.25 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.
விண்ணப்பித்தவர்களுக்கு 20ம் தேதி 'ரேண்டம் நம்பர்' வழங்கப்படும். 25ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 3ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் இந்த கவுன்சிலிங் நடக்கும். ஆகஸ்ட் 31ம் கவுன்சிலிங் நிறைவடையும்.












Click it and Unblock the Notifications