தனி தெலுங்கானாவை மக்கள் ஆதரிக்கவில்லை-ரோஜா
திருப்பதியில் அவர் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் தெலுங்கானா பகுதி மக்களின் ஒட்டு மொத்த ஆதரவும் எங்களுக்குத் தான் உள்ளது என்று கூறி வந்தார். ஆனால் இடைத் தேர்தல் அக் கட்சிக்கு மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். அந்த கட்சி இந்த தேர்தலில் 2 எம்.பி. தொகுதிகளையும், 9 எம்.எல்.ஏ. தொகுதிகளையும் இழந்துள்ளது.
இதன் மூலம் தெலுங்கான பகுதி மக்கள் தனி மாநிலத்தை விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது.
சந்திரசேகரராவ் இனி மேலும் தனி மாநிலம் போராட்டம் நடத்தினால் மக்கள் அவரை முற்றிலும் நிராகரித்து விடுவார்கள்.
தெலுங்கானா பகுதி தெலுங்கு தேசம் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. கடந்த தேர்தலில் தான் அங்கு தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்தது.
ஆனால் இந்த இடைத் தேர்தலில் மீண்டும் 6 தொகுதிகளை கைப்பற்றியுள்ளோம். அடுத்த பொதுத் தேர்தலில் தெலுங்கானாவின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
நடிகர் சிரஞ்சீவி ஆகஸ்டு மாதம் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கட்சியால் தெலுங்கு தேசம் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் ஆட்சியைப் பிடிக்கும் என்றார் ரோஜா.













Click it and Unblock the Notifications