குமரி வள்ளுவர் சிலைக்கு ரசாயானப் பூச்சு-படகு சவாரி நிறுத்தம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயானப்பூச்சு பூசப்படவுள்ளது. இதையடுத்து நான்கரை மாதங்களுக்கு வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு அருகே உள்ள பாறையில், 133 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை கடந்த திமுக ஆட்சியில் நிறுவப்பட்டது.
திருவள்ளுவர் சிலை கடல் காற்று உப்பினால் சேதம் அடைந்து வருகிறது. உப்பு காற்றினால் சிலையின் கை- கால் பகுதியில் உள்ள பாறைத் கற்கள் உதிர ஆரம்பித்துள்ளது. இது தொடர்ந்தால் சிலைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே உப்பு காற்றில் இருந்து சிலையை பாதுகாக்க, அதில் ரசாயன கலவையைப் பூச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசப்பட இருப்பதால், சிலையின் தலைப்பகுதி வரை இரும்பு கம்பிகளால் சாரம் கட்டப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், சிலை பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டியும், ரசாயன கலவை பூச்சு வேலை நிறைவடையும் வரை திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடை 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 16.10.2008 வரை நான்கரை மாதங்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும். வருகிற அக்டோபர் மாதம் 16-ந் தேதிக்கு பிறகே வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி தொடங்கும் என்று தெரிகிறது.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கன்னியாகுமரியில் ஆசையாய் வீடு கட்டி குடியேறிய மக்களுக்கு ட்விஸ்ட்.. கடைசியில் பாதையே இல்லை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications