சென்னையில் சிகரெட் விலை திடீர் கிடுகிடு உயர்வு

அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில், புகை பிடிப்பாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிகரெட விலை சென்னையில் திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அனைத்து வகை சிகரெட் வகைகளும் 50 பைசா கூட்டி விற்கப்படுகிறது. இதுகுறித்துக் கடைக்காரர்களிடம் கேட்டால் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறி சிகரெட் நிறுவனங்கள் விலையை ஏற்றி விட்டன என்கிறார்கள்.
அதேசமயம், கிங்ஸ் எனப்படும் கோல்ட்பிளேக் பில்டர் சிகரெட் மட்டுமே ஓரளவுக்கு கடைகளில் கிடைக்கிறது. இது ஒரு சிகரெட்
ரூ. 4.50க்கு விற்கப்படுகிறது (முன்பு 4 ரூபாயாக இருந்தது). மற்ற வகை சிகரெட்டுகள் இல்லை என்கிறார்கள்.
சரி, பீடியாவது கொடுங்கப்பா என்றால் அதுவும் ஸ்டாக் இல்லை என்று பல கடைகளில் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications