கர்நாடக சட்டசபை சபாநாயகரானார் ஷெட்டார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை சபாநாயகராக ஜெகதீஷ் ஷெட்டார் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வர் எதியூரப்பாவின் எதிர்ப்பாளரும் முன்னாள் கர்நாடக பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டார் தனக்கு அமைச்சர் பதவி தான் வேண்டும், சபாநாயகர் பதவி வேண்டாம் என்று கூறி வந்தார்.

ஆனால், அவரை அரசியல்ரீதியில் ஓரம் கட்டும் வகையில் சபாநாயகர் பதவி தர முடியும் என எதியூரப்பா கூறிவிட்டார். இதையடுத்து ஷெட்டாரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

5 அரசு பஸ்கள் எரிக்கப்பட்டன. ஆனாலும் இந்த விஷயத்தில் பாஜக தவிர ஆர்எஸ்எஸ், விஎச்பியின் ஆதரவையும் பெற்றார் எதியூரப்பா.

இதையடுத்து ஷெட்டாரை டெல்லிக்கு அழைத்த பாஜக தலைமை சமாதானம் பேசியது. இதைத் தொடர்ந்து சபாநாயகராக அவர் ஒப்புக் கொண்டார்.

இந் நிலையில் நேற்று கர்நாடகத்தின் 13வது சட்டசபை கூடியது. இன்று சபாநாயகர் தேர்வு நடந்தது. இதில் ஷெட்டார் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து அவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரையும் நிறுத்தாத எதிர்க் கட்சிகளுக்கு எதியூரப்பா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் ஷெட்டாரையும் வாழ்த்திப் பேசினார் எதியூரப்பா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+