தமிழகத்தில் 7ம் தேதி ஆட்டோக்கள் இயங்காது
Subscribe to Oneindia Tamil

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அன்றைய தினம் தமிழகத்தில் பந்த் நடத்த இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந் நிலையில் இடதுசாரி தொழிலாளர் சங்கமான சிஐடியுவுடன் இணைந்த தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் போராட்டத்தில் முழு அளவில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் 7ம் தேதி ஆட்டோ போக்குவரத்து முழு அளவில் பாதிக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டங்களும் நடத்தவுள்ளனனர்.
இந்த பந்த்தை வெற்றிகரமாக்குமாறு தொழிலாளர்களுக்கு சிஐடியூ பொதுச் செயலாளர் செளந்தர்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்கள், மில்கள், அமைப்பு சாராத தொழிலாளர்கள் ஆகியோர் இதில் பங்கேற்க வேண்டும் என கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications