For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ், லாரி, வேன், ஆட்டோ கட்டணம் உயரும்

By Staff
Google Oneindia Tamil News

Traffic
சென்னை: டீசல் விலை உயர்வால் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ. 17 கோடி செலவாகும் எனத் தெரியவந்துள்ளது.

அதே போல தனியார் பேருந்துகள், லாரிகள், வேன்கள், டெம்போ, ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகன நிறுவனங்களுக்கும் செலவு அதிகரிக்கவுள்ளது. இதனால் பஸ், லாரிகள் உள்பட சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்கள் நிச்சயம் உயரும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 19,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கு மாதம் 5.69 கோடி லிட்டர் டீசல் செலவாகிறது. இப்போது டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்ந்துள்ளதால், மாதம் ரூ. 17 கோடி செலவாகும்.

2001ம் ஆண்டு்க்குப் பின் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படாத நிலையில், போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் தான் இயங்கி வருகின்றன. இப்போதைய டீசல் விலை உயர்வால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும்.

ஆனாலும், கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தாது என்றே தெரிகிறது.

ஆனால், தனியார் நிறுவனங்களால் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 43 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுவிட்டதால், ஏற்கனவே தனியார் பேருந்து நிறுவனங்கள் கஷ்டத்தில் தான் உள்ளன.

கட்டண உயர்வை அரசு அனுமதிக்காவிட்டால் இந்தத் தொழிலை தொடர்ந்து நடத்துவது சிரமம் என்கின்றனர் அவர்கள்.

அதே போல லாரி, வேன் உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்களும் இந்த டீசல் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த விலை உயர்வை சமாளிப்பது குறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின் கூட்டம் வரும் 7ம் தேதி டெல்லியில் நடக்கிறது. அதில் கட்டண உயர்வு குறித்தும் போராட்டம் நடத்துவது குறித்தும் முடிவாகும் எனத் தெரிகிறது.

போக்குவரத்து வாகனங்களின் கட்டணங்கள் உயர்ந்தால் அரிசியில் ஆரம்பி்த்து சோப்பு உள்பட அத்தியாவசியப் பொருட்கள், வீட்டு-அலுவலக உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X