For Daily Alerts
Just In
ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாளை நாடு தழுவிய ஸ்டிரைக்
மதுரை: ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்பட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஸ்டேட் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும், செளராஷ்டிரா வங்கியை ஸ்டேட் வங்கியுடன் இணைக்கக் கூடாது உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனில் ஜூன் 10, 11 தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட பல ஆயிரம் பேர் ஈடுபட உள்ளதால் நாளை வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என தெரிகிறது.
Story first published: Thursday, June 5, 2008, 17:19 [IST]