கொழும்பில் ஓடும் பஸ்சில் குண்டுவெடிப்பு-21 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

கொழும்பு புறநகர் பகுதிகளில் சமீப காலமாக தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ரயில் நிலையம் ஒன்றில் நடந்த இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 27 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் கொழும்பு அருகே மொரட்டுவா என்ற இடத்தில் ஓடும் பஸ்சில் குண்டுவெடித்தது. மொரட்டுவா பகுதியில் அந்தப் பஸ் போய்க் கொண்டிருந்தபோது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது.
இதில் அந்தப் பஸ் முற்றிலும் சேதமடைந்தது. இதில் 7 பெண்கள் உள்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால், அப்பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications