கருணாநிதியின் பிறந்த நாள் பரிசு: வைகோ கேலி
நாகர்கோவில்: முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் பரிசாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற தொண்டரணி கூட்டத்தில் பங்கேற்க வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே விலை வாசி உயர்வு நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த விலை ஏற்றத்தை தவிர்க்க பல வாய்ப்புகள் இருந்தும் அதை மத்திய மாநில அரசுகள் செய்யவில்லை. மேலும், எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் குறைந்து விடக்கூடாது என்றும், அரசின் வருவாய் குறைந்து விடக்கூடாது என்பதற்காவும் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும் தவறான கொள்கைகளை கடைபிடித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இது வரை இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்களுக்கு துன்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசுக்கு துணையாகவும், ஆதரவாகவும் உள்ள கட்சிகள் , மத்திய அரசை கண்டித்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல்.
தற்போது கருணாநிதி பிறந்த நாள் விழாவை திருவிழாவாக கொண்டாடி வருகிறார். அதற்கு மத்திய அரசு கொடுத்த பரிசு தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications